Pages

Ads 468x60px

Featured Posts

Friday 4 May 2012

எல்லை



பெரும் பரப்பிலான
எல்லையைத்தொலைத்த
சோகத்தில்
நாளும் எழுதிக்கொண்டேயிருக்கின்றன
கண்ணீர் கவிதைகளை.
போ.மணிவண்ணன்,
கோவை.
9443751641



இடம்


குழலின் துளைகள்
ஒத்திருந்தும்
வாய்த்த இடம் பொருத்தே
அதனதன்
மொழி.
சரா,
கொளத்தூர்.
9840704870




Tuesday 1 May 2012

பரிசு


இருள் சூழ்ந்த
உன் உலகத்தை
ஒரு தீக்குச்சி வெளிச்சத்தில்
மீட்டெடுத்த எனக்கு
ரகசியமாய்
பரிசளித்துப்போகிறாய்
தேய்பிறையின் கடைசிநாளை.
சுரேஷ்மான்யா,
லால்குடி.
9788190255


வலி








ஒப்பாரியானது ரீங்காரம்
கொட்டலில்
கூடிழந்த வலி
இதுகாறும்
சேமித்த தேனடையிலிருந்து
சொட்டுகிறது
செங்குருதி.
தனலெட்சுமிபாஸ்கரன்,
திருச்சி.
9965895540

காலம்



நம் முன்
இருக்கும்
பருகப்படாதத்தேனீரில்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது
காலம்.
ஜா.பிராங்க்ளின்குமார்,
மதுரை.
9843921471

Sunday 29 April 2012

தாயம்



எப்போதும்
தாயம் விழுவதில்லை
அதிலும் குறிப்பாக
தாயம்
தேவைப்படும்போது,
ஆனாலும்
ஆட்டம் தொடர்கிறது
அதன் போக்கில்...
-ரிஷபன்,
திருச்சி.
9442502781